கண்ணடி நாயகி பிரியா பிரகாஷ் வாரியர் மீதான வழக்கு: நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் மீதான வழக்கு குறித்து நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது.

வலைதளங்களில் சில நாள்களுக்கு முன்னர் ஓவர்நைட்டில் இந்தியாவில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பிரபலமானவர் பிரியா பிரகாஷ் வாரியர்.

'ஒரு அடார் லவ்' என்ற மலையாளத் திரைப்படம் மூலம் வெளியான ஒரு பாடல் வீடியோவின் மூலம் திடீரென பிரபலமடைந்ததால் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என அனைத்திலும் மில்லியன் கணக்கில் இவருக்கு ரசிகர்கள் சேரத் தொடங்கினர்.

இந்நிலையில், பிரகாஷ் வாரியரின் அந்த ஹிட் பாடலில் சில வரிகள் இஸ்லாமிய மதம் குறித்து தவறாகக் கூறப்பட்டிருப்பதாக ஹைதராபாத் நகரைச் சேர்ந்த சிலர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பிரியா பிரகாஷ், 'அந்தப் பாடல் வரிகள் கேரளாவில் மலையாள முஸ்லிம்களின் உள்ளூர் பாடல் ஆகும். இதைப் பலரும் ஊர்க்காரப் பாடலாக வைத்திருப்பதால்தான் கேரளாவில் இதுவரையில் எந்தப் புகாரும் பதியவில்லை' எனக் கூறியுள்ளார்.

பிரியா பிரகாஷின் பதில் குறித்தும் புகார் குறித்தும் வழக்கு நாளை, உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

More News >>