பார்த்த ஞாபகம் இல்லையோ பருவ நாடகம் தொல்லையோ.. 400வது படத்தல் சவுகார் ஜானகி ரீ என்ட்ரி....

புதிய பார்வை படத்தில் பார்த்த ஞாபகம் இல்லையோ பருவ நாடகம் தொல்லையோ என்று பாட்டுக்கு நடனம் ஆடி ரசிகர்களின் நெஞ்சுக்குள் புகுந்த சவுகார் ஜானகி 70, 80களில் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் என எல்லா முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். சில காலம் நடிப்பிலிருந்து விலகியிருந்தார்.

பின்னர் கமலுடன் 'ஹேராம்' படத்தில் நடித்துவிட்டு மீண்டும் 14 வருட இடைவெளிக்குப் பிறகு தமிழில் 'வானவராயன் வல்லவராயன்' படத்தின் மூலம் மீண்டும் நடிக்கத்தொடங்கினார். தற்போது'சவுகார்' ஜானகி, ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்கும் படம் மூலம் தனது 400-வது படத்தை தொட்டிருக்கிறார்.

ஏ1 படத்தின் வெற்றியை தொடர்ந்து சந்தானம் நடிப்பில் தற்போது டகால்டி, டிக்கிலோனா படங்கள் உருவாகி வருகிறது.

More News >>