சம்பளத்தை உயர்த்திய ராஷ்மிகா: தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி... தமிழிலும் போட்டிக்கு தயாராகிறார்..

விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த டியர் காம்ரேட். கீதாகோவிந்தம் உள்ளிட்ட படங்களில் நடித்த ராஷ்மிகாவுக்கு அடுத்தடுத்து 3 படங்கள் தெலுங்கில் ஹிட்டாக அமைந்தன.

தற்போது தமிழில் சிவகார்த்திகேயனுடன் நடித்து வருகிறார். இப்படத்தையடுத்து தனது சம்பளத்தை திடீரென்று அதிகளவுக்கு ராஷ்மிகா உயர்த்திவிட்டாராம். பெரிய ஹீரோக்கள், நடுத்தர ஹீரோக்கள் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் அதிக சம்பளம் தரக் கேட்கிறாராம். இது தயாரிப் பாளர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

இதுகுறித்து ராஷ்மிகா தரப்பில் கூறும்போது,'3 படங்கள் தொடர்ச்சியாக ஹிட்டாக அமைந்தது. இதையடுத்து அவரது சம்பளம் உயர்ந்தது. ஆனால் அதிக சம்பளம் கேட்டு யாரையும் அவர் வற்புறுத்தவில்லை. காரணமில்லாமல் சம்பளம் அதிகம் கேட்பதில்லை' என்கின்றனர்.

ராஷ்மிகா சம்பளம் உயர்த்தினாலும் அவரது மார்க்கெட் நிலவரத்தை பொறுத்துஅதிக சம்பளம் தர சில தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளனர்.இந்நிலையில் இந்தியில் நடிக்கவும் ராஷ்மிகாவுக்கு அழைப்பு வந்திருக்கிறதாம். சிவகார்த்திகேயன் படம் மூலம் தமிழிலும் அறிமுகமாக இருப்பதால் பல இளம் நடிகைகளுக்கு ராஷ்மிகாவின் வரவு சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

More News >>