சூர்யா படத்தில் நடித்த நைஜீரிய நடிகர் கைது... உளவு துறையினரிடம் ஒப்படைப்பு...

ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான எஸ் 3 படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்தவர் முகமது அகான்பி ஓஜரா என்கிற ஓலா ஜேசன். நைஜிரியாவை சேர்ந்த இவர் இந்தியில் ஆமீர்கான் நடித்த தங்கல் மற்றும் கேரி ஆன் கேசார், ராக் தேஷ், ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் ஓலா ஜேசன் நேற்று அதிகாலை சுற்றிக் கொண்டிருந் தார். அவரிடம் விமான நிலைய தொழில் பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தினார். அவரிடம் விஸ்தாரா விமானத்தில் கோவா செல்வதற்கான டிக்கெட் இருந்தது.

பாஸ்போர்ட்டை பார்த்தபோது, அவரது விசா, கடந்த 2011 ஆம் ஆண்டே முடிந்துவிட்டது தெரிந்தது. விசா காலம் முடிந்தும் அவர் இங்கு தங்கியிருந்துள்ளார்.

இதுகுறித்து அதிகாரிகள் விசாரித்தபோது முன்னுக்குபின் முரணாக பதிலளித்தார். இதையடுத்து அதிகாரிகள் ஓலா ஜேசனை கைது செய்து உளவுத்துறையிடம் ஒப்படைத்தனர். அவர்கள் நைரிலய நடிகரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

More News >>