நான் பூ அல்ல விதை - கட்சி தொடங்கும் முன்பே ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த கமல்ஹாசன்

நான் பூ அல்ல விதை என்றும் தன்னை முகர்ந்து பார்க்க வேண்டாம், விதைத்து பாருங்கள் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

முன்னதாக இன்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டிருந்த அறிக்கையில், “பருவநிலை மாறும்போது ஒரு சில பூக்கள் திடீரென மலரும், பின் உதிரும். அதுபோல தமிழக அரசியல் களத்திலும் கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலரலாம். ஆனால், காகிதப் பூக்கள் மணக்காது” என்று கூறியிருந்தார்.

கமல்ஹாசன் நாளை தனது அரசியல் பிரவேசத்தின் தொடக்கமாக கட்சியின் பெயர், கொடி, கொள்கைகள் அனைத்தையும் வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மு.க.ஸ்டாலின் இவ்வாறு கூறியிருந்தது கமலை விமர்சிக்கவே என்று அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

இதற்குப் பதில் அளித்துள்ள கமல்ஹாசன், “நான் பூ அல்ல, விதை. என்னை முகர்ந்து பார்க்காதீர்கள். விதைத்துப் பாருங்கள், வளர்வேன். நான் கூட்டணி வைப்பேன் என்று எப்போதும் சொன்னதில்லை” என்று தெரிவித்துள்ளார். அரசியல் கட்சி தொடங்கும் முன்பே, திமுக-வை விமர்சித்துள்ளது அனைவரது புருவத்தையும் உயர்த்தச் செய்துள்ளது.

More News >>