நடிகையை படுக்கைக்கு அழைத்த பிரபல நடிகர்.... இஷாகோபிகர் பரபரப்பு புகார்...

நெஞ்சினிலே, ஜோடி, நரசிம்மா என் சுவாசக் காற்றே  போன்ற படங்களில் நடித்ததுடன் பல்வேறு இந்தி படங்களில் நடித்திருப்பவர் இஷா கோபிகர்.  நடிகர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

இதுகுறித்து மும்பையில் அவர் கூறியதாவது:

தயாரிப்பாளர் ஒருவர் என்னை அழைத்து பிரபல நடிகரின் பெயரைச் சொல்லி, அவரிடம் பேசுங்கள் உங்களுக்கு பட வாய்ப்பு கிடைக்கும், அவரிடம் நல்லபெயர் வாங்கிவிட்டால் நிறைய பட வாய்ப்புகள் வரும், நீங்கள் பெரிய நடிகையாகிவிடலாம் என்றார். நானும் அந்த நடிகரை தொடர்பு கொண்டு பேசினேன். அவர் என்னிடம் தனது தினசரி பணிகள்பற்றி கூறினார்.

அதிகாலையில் எழுந்து ஜிம்மிற்கு சென்றுவிடுவேன், அதனால் டப்பிங் தியேட்டருக்கு வா அங்கு இடைவேளையில் பேசலாம் என்றதுடன், யாருடன் வரப்போகிறாய் என்றார். டிரைவருடன் வருகிறேன் என்றேன். யாருடனும் வேண்டாம் தனியாக வா. நான் ஒன்றும் 15 வயது 16 வயது பையன் இல்லை என்றார். அவர் எதற்காக என்னை தனியாக வரச்சொல்கிறார் என்பதை புரிந்துகொண்டேன். உடனே நான் இன்றைக்கு வேறு வேலை இருக்கிறது அதனால் நாளை வருகிறேன் என்று சொல்லி விட்டு போன் இணைப்பை துண்டித்துவிட்டேன்.

நடிகரிடம் என்னை பேச்சொன்ன தயாரிப்பாளருக்கு போன் செய்து, எனது திறமைக்காகத்தான் வாய்ப்பு தரவேண்டும், வேறு எதற்காகவும் இல்லை. பட வாய்ப்புக்காக படுக்கைக்கு வரும் நடிகை நான் இல்லை என்றேன். பின்னர் அந்த நடிகருடன் ஒருபோதும் நான் நடிக்கவில்லை.

பிரபல  நடிகர்களின் செகரட்ரிகள் அதிக உரிமை எடுத்துக்கொண்டு என்னை தவறான இடங்களில் தொட்டு பேசுவார்கள். அதுபோன்ற நபர்களிடமிருந்து என்னை தற்காத்துக் கொள்ள தற்காப்பு கலைகளை கற்றுக்கொண்டேன். இந்த சம்பவங்களுக்கு பிறகு  எனக்கு பட வாய்ப்புகள் வரும்போதெல்லாம் அந்த வாய்ப்பு என்னை விட்டு நழுவி வேறு நடிகைக்கு சென்றுவிடும். குறிப்பிட்ட நடிகரின் உறவுப் பெண்ணுக்கு அந்த வாய்ப்பு சென்றிருக்கும். இதனால் நிறைய பட வாய்ப்புகளை நான் இழந்திருக்கிறேன்.

இவ்வாறு இஷா கோபிகர் கூறினார். படுக்கைக்கு அழைத்தவர் யார் என்று நடிகரின் பெயரை சொல்ல மறுத்துவிட்டார் இஷா கோபிகர்.

More News >>