நயன்தாராவை கோபக்காரர் ஆக்கிய இயக்குனர் யார் தெரியுமா? அவரே உடைத்துச் சொன்ன ரகசியம்...

பிரபல இயக்குனர் சொன்னபடி கதையை எடுக்காததால் நடிகை நயன்தாரா கோபக்கரராக மாறினார். இதுபற்றி அவர் வெளியிட்ட தகவல் வருமாறு:

கஜினி படத்தில் நடித்தது நான் செய்த பெரிய தவறாக உணர்கிறேன். அதில் மருத்துவக்கல்லூரி மாணவியாக வேடம் தரப்பட்டது. வேடத்தை பொறுத்தவரை தவறு எதுவும் இல்லை. ஆனால் என்னிடம் சொல்லப்பட்ட கதைக்கும் படத்துக்கும் சம்பந்தம் இல்லை. எனது கதாபாத்திரம் சொன்னப்படி இல்லாமல் வேறுவிதமாக காட்சிகள் படமாக்கப்படடது. இதனால் முழுமையாக ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தேன்.

அதன்பிறகுதான் படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளும்முன் கெடுபிடி காட்டுகிறேன். எனது கதாபாத்திரத்தை கவனமாக கேட்கிறேன். சொல்வதற்கு மாறாக படப்பிடிப்பில் மாற்றி எடுக்கக்கூடாது என்பதற்காகத்தான் அப்படி செய்கிறேன். இதனால் என்னை கெடுபிடிக்காரி என்று சொன்னாலும் பரவாயில்லை. நான் தொடர்ந்து இப்படித்தான் இருப்பேன். நான் சினிமாவில் வெற்றிகரமாக இருக்க இதுவும் ஒரு காரணம் இவ்வாறு நயன்தாரா கூறினார்.

கஜினி படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். படம் வெளியான அந்த சமயத்திலேயே நயன்தாரா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். நீண்ட காலம் அவரது இயக்கத்தில் நடிக்காமலிருந்த நயன்தாரா மீண்டும் தர்பார் படம் மூலம் அவரது இயக்கத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

More News >>