காதலனுடன் பிரேக் அப்:  டென்ஷனில் தவித்த இலியானா... மன உளைச்சல் இருந்து மீண்டு வர சிகிச்சை...

கடந்த 2 வருடமாக காதலித்து வந்த வெளிநாட்டு பாய்பிரண்ட் ஆண்ட்ரு நிபோனிடமிருந்து பிரேக் அப் செய்துகொண்டார் இலியானா. லிவிங் டு கெதராக வாழ்ந்து  வந்த காதலன் பிரிந்ததால் டென்ஷனுக்குள்ளானார். சோகமாகவே சுற்றிக் கொண்டிருந்த இலியானாவை   டாக்டரிடம் சென்று மனநல சிகிச்சை பெற சிலர் அட்வைஸ் செய்தனர்.

இதுகுறித்து இலியானா கூறியதாவது:  லவ் பிரேக் அப்பிற்கு பிறகு எனது நிலையை பார்த்தவர்கள் என்னை மனநல சிகிச்சை எடுத்துக்கொள்ள  அட்வைஸ் செய்தனர். அதன்படி டாக்டரை சந்தித்தேன். அவர் அறிவரை தந்தார். தற்போது மனம், எண்ணம் மற்றும் உடல் அளவில் எனக்குள் பெரிய வித்தியாசத்தை உணர்கிறேன்.

நமக்கு ஒரு காதலன் இருப்பது அமைதியையும் பாதுகாப்பு உணர்வையும் தருகிறது. ஆனால் அதைவிட நமது மனநிலை மிக முக்கியம். நான் மீண்டும் காதலுக்கு தயாரில்லை. இது எனக்கு ஒரு பாடம். யாரிடமும் நான் கசப்பு உணர்வோ, எதிரான உணர்வையோ காட்ட விரும்பவில்லை. அத்தகைய எண்ணங்கள் என்னைவிட்டு உறுதியாக சென்றுவிட்டது. தவறான ஒரு சம்பவம் நடந்து விட்டது. ஆனாலும் வாழ்க்கை தொடர்கிறது. இவ்வாறு இலியானா கூறினார்.

More News >>