ரஜினி முடித்த தர்பார் டப்பிங் .. மின்னல் வேகத்தில் வசனம் பேசி அசத்தினார்...

ஏ,ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் படம் தர்பார். நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார்.

தர்பார் படத்தின் படப்பிடிப்பை கடந்த மாதமே முடித்தார் ரஜினிகாந்த். இந்நிலையில் படத்தின் டப்பிங் பணிகளை சில தினங்களுக்கு முன் தொடங்கினார். மின்னல் வேகத்தில் வசனங்களை ரஜினி பேசியதை கண்டு இயக்குனர் முருகதாஸ் அசந்துபோன துடன், ஒவ்வொரு காட்சிக்கும் ஆக்‌ஷனுடன் அவர் வசனம் பேசியதை ரசித்தார்.

இந்நிலையில் முருகதாஸ் ரஜினியுடன் இருக்கும் படம் ஒன்றை வெளியிட்டு தர்பார் டப்பிங் பணிகள் முடிந்ததாக தெரிவித்துள்ளார். எனது வாழ்நாளில் பார்த்த சிறந்த டப்பிங்பணி இது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.  

தர்பார் படம் வரும்  பொங்கல் தினத்தில் திரைக்கு வருகிறது.

More News >>