நடிகர் சிபாரிசை உதறிய பிரபல நடிகை...ரூ 1 கோடி சம்பளம் வேண்டாம் என ஒதுங்கினார்...

நடிகை சாய்பல்லவி தனக்கென ஒரு பாலிசி வகுத்துக்கொண்டு படங்களில் நடித்து வருகிறார். வெளிநாடு சென்று டாக்டருக்கு படித்த பின்பும் அவருக்கு பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்ததால் டாக்டர் தொழிலுக்கு ஓய்வு கொடுத்து விட்டு நடித்துக்கொண்டிருக் கிறார்.  தமிழில் மாரி 2ம் பாகத்தில் தனுஷுடன் ஜோடி போட்டவர் புதிய படத்தில் நடிக்க பேசி வருகிறார். மேலும் தெலுங்கில் 2 படங்களில் நடித்து வருகிறார்.   கைவசம் படங்கள் கொஞ்சமாக வைத்திருக்கும் சாய்பல்லவிக்கு புதிய பட வாய்ப்புகள் நிறைய தேடி வருகின்றன. கதை சரியில்லை என்று அவற்றை ஏற்காமல் ஒதுக்குகிறார். சமீபத்தில் புதிய படத்தில் ஒப்பந்தம் செய்ய சாய் பல்லவியை ஒரு தயாரிப்பாளர் சந்தித்து அதிக சம்பளம் தருவதாக ஆசை காட்டினார். அதற்கு சாய்பல்லவி  முதலில் படத்துக்கான ஸ்கிரிப்ட்டை திருப்தியாக கொண்டு வாருங்கள் நடிப்பதுபற்றி பிறகு சொல்கிறேன் என்று அனுப்பி வைத்தார்.   இந்நிலையில் ஆடை விளம்பரங்களில் நடிக்கும் பிரபல நடிகர் ஒருவர் தன்னிடம் நட்பாக பழகும் சாய்பல்லவியை ஆடை விளம்பர நிறுவன தூதராக ஒப்பந்தம் செய்ய பேச்சு நடத்தினார். 1 கோடி சம்பளம் தருவார்கள் அம்பாசிடராக இருக்க விருப்பமா என்றபோது அதையும் ஏற்க மறுத்துவிட்டார்.   ஏற்கனவே சில மாதங்களுக்கு முன் அழகு கிரீம் விளம்பரத்தில் நடிக்க ஒரு நிறுவனம் அணுகியபோது அதையும் சாய் பல்வி ஏற்கவில்லை என்பது தெரிந்ததே.
More News >>