அழியாத கோலங்கள் 2ம் பாகம்  ரிலீஸ்.. பிரகாஷ்ராஜ், அர்ச்சனா, ரேவதி போட்டி நடிப்பு...

பிரகாஷ்ராஜ், நாசர், ரேவதி, ஈஸ்வரிராவ், அர்ச்சனா, விஜய் கிருஷ்ணராஜ், மோகன்ராம் நடிக்கும் படம் 'அழியாத கோலங்கள் 2'.  இப்படத்தை இயக்குகிறார் எம்.ஆர்.பாரதிபடம் பற்றி அவர் கூறியதாவது:  

இயக்குனர் பாலு மகேந்திராவின் நினைவாக இந்த படத்திற்கு " அழியாத கோலங்கள் 2 " என்று பெயர் வைத்துள்ளேன். மற்றபடி அவர் இயக்கிய அழியாதகோலங்கள் படத்திற்கும் இந்த படத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இது ஒரு வங்காள திரைப்படத்தின் தழுவல்.   கதை இதுதான்.  

சாகித்ய அகடமி விருது பெற்ற ஒரு எழுத்தாளன் தனது காதலியை பார்க்க அவரது வீட்டிற்கு செல்கிறான் காதலி அவரது கணவனை இழந்து தனியே வசிக்கிறார்,  24 வருடங்களுக்கு பின் சந்திக்க வரும் அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார். இருவரும் தங்களது வாழ்க்கை அனுபவங்களை மனம் விட்டு பேசுகிறார்கள். எழுத்துலகில் தான் பெற்ற அத்தனை சிறப்பு களுக்கும் நீதான் காரணம் என்பதை செல்கிறான்.  

காதலனுக்கு அன்றிரவு திடீரென  மாரடைப்பு ஏற்ப்பட்டு இறந்து விடுகிறான்.  அதன் பின் காதலி என்ன ஆனால் அவளை இந்த சமூகம் எப்படி எடுத்துக்கொள்கிறது, காதலன் மனைவி என்ன செய்யப்போகிறார்  என்பதை ஒரு இரவில் நடக்கும் கதையாக உருவாக்கி  உள்ளேன்.

எழுத்தாளராக பிரகாஷ்ராஜ், பழைய காதலியாக அர்ச்சனா, மனைவியாக ரேவதி நடித்திருக்கின்றனர். ராஜேஷ் கே.நாயர் ஒளிப்பதிவு செய்து்ளார்.  அரவிந்த் சித்தார்த் இசை அமைக்கிறார் கவிப் பேரரசு வைரமுத்து பாடல் எழுதி உள்ளார். - ஈஸ்வரிராவ் - தேவசின்ஹா இணை தயாரிப்பு செய்துள்ளனர்.

வள்ளியம்மை அழகப்பன் தயாரிக்கிறார்.  வரும் 29ம் தேதி உலகமெங்கும் படம் வெளியாக உள்ளது.

More News >>