அண்ணிக்கு  தனுஷ் அளித்த பரிசு. மகிழ்ச்சியில் கீதாஞ்சலிசெல்வராகவன்..

7ஜிரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன், என்ஜிகே போன்ற படங்களை இயக்கிய செல்வராகவன் அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். அதற்கான ஸ்கிரிப்ட் பணி நடந்து வருகிறது. செல்வராகவன் தன்னிடம் உதவி இயக்கு னராக பணியாற்றிய கீதாஞ்சலியை மணந்தார்.  அவரும், மாலை நேரத்து மயக்கம் என்ற படத்தை இயக்கி உள்ளார். கீதாஞ்சலிக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கம் அதிகம். அவருக்கு  தனுஷ் அவ்வப்போது விதவிதமான  பரிசளிப்பது வழக்கம். சமீபத்தில், The Hunting Party மற்றும் The Silence Of the Girls என்ற  2 புத்தங்களை பரிசளித்தார். அதை பெற்றுக்கொண்ட கீதாஞ்சலி மகிழ்ச்சி அடைந்து அப்புத்தகங்களின் ஸ்பெஷல் குறித்து தனது இணைய தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். 'புத்தகம் வாசிக்கும் பழக்கம் உள்ள அனைவருக்கும் இந்த 2 புத்தகங்களும் பரிசாக கிடைத்தால் மகிழ்ச்சியில் துள்ளுவார்கள். அந்த உணர்வில்தான் நான் இருக்கிறேன்' என கீதாஞ்சலி தெரிவித்திருக்கிறார்.
More News >>