டெல்லியில் பயங்கரம்: கத்தியால் குத்தி 2 பேர் கொலை

புதுடெல்லி: முன்விரோதம் காரணமாக கத்தியால் குத்தியதில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லி நரேலா பகுதியில் நேற்று இரவு இரண்டு கும்பலுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது, திடீரென ஒரு கும்பல் தாங்கள் வைத்திருந்த கத்தியை எடுத்து மற்றொரு கும்பல் மீது தாக்க தொடங்கியது.

இதில், இரண்டு பேருக்கு பயங்கர கத்தி குத்து ஏற்பட்டது. இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தனர். இதையடுத்து, கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட கும்பல் அங்கிருந்து தப்பியது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், அங்கு விரைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த இருவர் மற்றும் படுகாயமடைந்தவர்களையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, கோவிந்த் (25), சதீஷ் (40) ஆகியோர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, இருவரது இறப்பை உறுதி செய்த போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்தனர்.

இதுகுறித்து விசாரணை நடத்தியதில், இரு கும்பலுக்கும் இடையே இருந்த முன்விரோதம் காரணமாக இருவர் கொல்லப்பட்டது தெரியவந்தது. கொலைக்கு காரணமான கும்பபை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

More News >>