ஹர்திக் பாண்டியாவை கபில் உடன் ஒப்பிடுவதை நிறுத்துங்கள்- முன்னாள் வீரர் ஆவேசம்

"ஹர்திக் பாண்டியாவை கபில் தேவ் உடன் ஒப்பிடுவதை முதலில் நிறுத்த வேண்டும்" என முன்னாள் இந்தியகி கிரிக்கெட் வீரர் ரோஜர் பின்னி ஆவேசமடைந்துள்ளார்.

இந்தியக் கிரிக்கெட் அணி தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட், ஒரு நாள் போட்டி, டி20 போட்டி என இந்திய அணி தொடர்ந்து விளையாடி வருகிறது.

இந்தத் தொடர் ஆட்டங்கள் மூலம் அறிமுக வீரர்கள் கலக்கி வருகின்றனர். கேப்டன் விராட் கோலி, 'தல' தோனி என நட்சத்திர வீரர்களும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அதிகளவிலானப் புகார்கள் ஹர்திக் பாண்டியா மீது விழுந்துள்ளது. ஒரு நாள் போட்டிகள், டி20 என எதிலும் பாண்டியா பெரிதாக சோபிக்கவில்லை. இதையடுத்து முன்னாள் வீரர் ரோஜர் பின்னி பாண்டியா குறித்து கூறுகையில், "ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் எனக் கூறப்படுகிறார்.

இது அவருடைய அதிர்ஷ்டம் மட்டுமே. அதற்காக அவர் விளையாட்டுத் திறத்தை கபில் தேவ் உடன் ஒப்பிட்டு ஆல்-ரவுண்டர் எனக் கூறுவதை முதலில் அனைவரும் நிறுத்த வேணும்" எனக் கூறியுள்ளார்.

More News >>