என் மகனுக்கு சாதாரணமான வாழ்க்கை வேண்டும்: ரசிகர்களுக்கு கரீனா கபூர் வேண்டுகோள்

"எனது மகன் மீது ஊடக வெளிச்சம் விழுவதை நான் விரும்பவில்லை" என கரீனா கபூர் வேதனை தெரிவித்துள்ளார்.

பாலிவுட் திரையுலகின் நட்சத்திரத் தம்பதியராக அறியப்படும் சயிஃப் அலி காந் கரினா கபூர் தம்பதியருக்கு தய்மூர் அலி கான் என்ற மகன் உள்ளான். சயீப் நவாப் ராஜ வம்சம் என்பதால் மகன் தய்மூருக்கு நவாபுக்கு உரிய அந்தஸ்த்தும் நட்சத்திர தம்பதியரின் மகன் என்பதால் ஒரு பிரபலத்தின் அந்தஸ்தும் வட இந்திய ரசிகர்களால் வழங்கப்படுகிறது. இதனால் தய்மூர் தினமும் எது செய்தாலும் எங்கு சென்றாலும் அந்தப் புகைப்படங்கள் ஆந்லைனில் வைரலாகி வருகிறது.

இந்த பிரபல அந்தஸ்து எதுவும் தங்கள் மகனுக்கு வேண்டாம் என பெற்றோர் சயீப்- கரீனா விரும்புகின்றனர். சமீபத்தில் தய்மூர் வீடியோ கால் மூலம் தந்தை சயீப் உடன் பேசும் புகைப்படம் வைரல் ஆநது. இதையடுத்து தனது மகன் மீது விழும் ஊடக வெளிச்சம் குறித்து கரீனா கபூர் கூறுகையில், "எனது மகனுக்கு மிகவும் சாதாரணமாந குழந்தைப் பருவம் வேண்டும் என்பதையே விரும்புகிறேன். அவனைப் பிரபலமாக்கி அவனது இயல்பை மாற்ற வேண்டாம்" என வேதனையுடன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

More News >>