ரஜினி, கமல் அரசியல்பற்றி எங்கிட்ட ஏன் கேக்கிறீங்க... கோபத்தில் பொங்கிய நடிகை..

ரஜினிகாந்த், கமல்ஹாசன் அரசியல் பிரவேசம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

கமல்ஹாசன் மக்கள் நீதிமய்யம் கட்சியை தொடங்கிவிட்டார். ரஜினி விரைவில் கட்சி தொடங்கி வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரிவித்து வருகிறார். இதுபற்றி பல்வேறு நடிகர், நடிகைகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில் நடிகை ஓவியாவிடம் ரஜினிகமல் அரசியலுக்கு வருவதுகுறித்து கேட்டபோது அவர் கப்சிப் என்று அமைதியானார். கேள்வி கேட்ட வரை ஒரு முறைப்புடன் பார்த்துவிட்டு நகர்ந்தார்.

பின்னர் இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட கருத்தில்,'அரசியலில் ஈடுபடும் நடிகர்கள் பற்றி அரசியல் பேசாத என்னைப் போன்ற நடிகர் நடிகையிடம் கேள்வி கேட்பதை விட அந்த தலைப்பில் பொது மக்களிடம் கேள்வி கேட்டால் உண்மையிலேயே வித்தியாசமான பதில்கள் உங்களுக்கு கிடைக்கும்' என தெரிவித்திருக்கிறார்.

More News >>