ரசிகர் உடலை கண்டு  கார்த்தி கதறல்.. சூர்யா - ஜோவுடன் மவுன அஞ்சலி..

நடிகர் கார்த்திக்கு தமிழ்நாடு முழுவதும் ரசிகர் மன்றங்கள் இருக்கின்றன. மன்றத்தினர் நற்பணிகளில் ஈடுபடுகின்றார்கள். கார்த்தியின் மக்கள் நல மன்ற சென்னை மாவட்ட அமைப்பாளர் வியாசை நித்தியா.  

உளுந்தூர்பேட்டை அருகே நேற்று இரவு நடந்த விபத்தில் மரணம் அடைந்தார். இதையறிந்து வருத்தம் அடைந்த  கார்த்தி  நேரில் சென்று நித்தியா உடலுக்கு  இறுதி அஞ்சலி செலுத்தினார். அப்போது நித்தியா உடலை பார்த்து அவர் கண்ணீர் வடித்தார்.

ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு  இதேபோல் சாலை விபத்தில் தனது ரசிகர் உயிரிழந்தபோது அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் கார்த்தி. அப்போது அவர் தனது ரசிகர்களுக்கு ஒரு கோரிக்கை விடுத்திருந்தார். இரவு நேரங்களில் காரில் பயணிப்பதை தவிர்த்துவிடுங்கள் என்று தெரிவித்திருந்தார். அதையே இப்போதும் மீண்டும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

ஜோதிகா, கார்த்தி  அக்கா, தம்பியாக நடிக்கும்  தம்பி படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நேற்று நடந்தது. சூர்யா, ஜோதிகா, கார்த்தி உள்ளிட்ட திரையுலகினர் பலர் கலந்துகொண்டனர். அந்நிகழ்ச்சியின்போது தனது விபத்தில் மறைந்த தனது ரசிகர் நித்தியாவுக்காக அனைவருடன் இணைந்து   மவுன அஞ்சலி செலுத்தினார் கார்த்தி.

More News >>