ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் தெரியுமா..?

பா.ரஞ்சித், சங்கரை தொடர்ந்து ரஜினியின் அடுத்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த்தின் இரண்டு படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக காத்துக் கொண்டிருக்கின்றன. அதில் ஒன்று, இயக்குனர் சங்கர் இயக்கிய 2.0 மற்றொன்று பா.ரஞ்சித் இயக்கிய காலா. இரண்டு படங்களின் ஷூட்டிங்கும் முடிந்துவிட்டன.

இந்நிலையில், காலாவின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடியும் தருவாயில் இருப்பதால், காலா படம் வரும் ஏப்ரல் 27ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பிரம்மாண்டமாக தயாரித்து வரும் 2.0 படத்தின் கிராபிக்ஸ் பணிகள் இன்னும் முடியாததால் ரிலீஸ் தேதி தள்ளிப்போடப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் படம ரிலீசாகி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ரஜினியின் அடுத்த படத்தை இயக்குப்போவது யார் என்ற கேள்வி எழும்பியது. இதில், இயக்குனர்கள் அட்லீ, அருவி பட இயக்குனர் அருண் பிரபு, ஜிகர்தண்டா, இறைவி பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோரிடம் ரஜினி கதை கேட்டதாக தெரிகிறது.

இறுதியாக, ரஜினியின் அடுத்த படத்தை கார்த்திக் சுப்புராஜே இயக்குகிறார் என்ற தகவல் கசிந்துள்ளது. இதன் அதிகாரப்பூர்வ தகவலை விரைவில் இயக்குனர் வெளியிடுவார் என சினிமா வட்டாரம் தெரிவித்துள்ளது.

More News >>