ரேவதி, சில்க் சில்க் சில்க் தொடர்ந்து ஜோ..

நடிகை ரேவதி, சில்க் ஸ்மிதாவை தொடர்ந்து நடிகை ஜோதிகாவின் பெயரை கொண்டு அவரது படத்திற்கு டைட்டில் வைக்க படக்குழுவினர் பரிசீலித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் நடிக்கும் நடிகையின் பெயரையே பட டைட்டிலாக வைப்பது அரிதான ஒன்று. இதற்கு முன்பு நடிகை ரேவதி நடித்து கடந்த 1986ம் ஆண்டில் வெளிவந்த படத்திற்கு ரேவதி என்றும், கடந்த 1983ம் ஆண்டில் சில்க் நடித்த படம் ஒன்றிற்கு சில்க் சில்க் சில்க் என்றும் படத்தின் டைட்டில் வைக்கப்பட்டது.

இந்நிலையில், ஜோதிகா நடிக்க இருக்கும் படத்திற்கு ஜோ என்று பெயர் வைக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். பாலிவுட் திரைப்படம் ஒன்றின் ரீமேக் படத்தில் ஜோதிகா ஆர்.ஜே.வாக நடிக்க உள்ளார். அதனால், இந்த படத்திற்கு உங்களுடன் ஜோ என்று டைட்டில் வைக்க படக்குழுவினர் பரிசீலித்து வருகின்றனர்.

இந்த டைட்டில் உறுதியானால், ரேவதி, சில்க் ஸ்மிதாவிற்கு பிறகு தனது பெயரையே பட டைட்டிலிற்கு வைத்து நடிக்கும் அடுத்த நடிகை ஜோதிகா தான்.

More News >>