1 வருடத்தில் தமிழ் நடிகை விவாகரத்து.. மாஜி கணவருக்கு வாழ்த்து பகிர்ந்தார்..

தமிழில் சந்தமாமா, ரா ரா, ஒரு முத்தம் ஒரு யுத்தம், மெய் படங்களில் நடித்ததுடன் தெலுங்கு, இந்தி படங்களில் நடித்திருப்பவர் சுவேதா பாசு.  கடந்த ஆண்டு 2018ம் ஆண்டு மும்பையில் ரோஹித் மிட்டல் என்பவரை காதலித்து மணந்தார் சுவேதா பாசு. அமைதியாக நடந்து முடிந்த இந்த காதல் திருமணம் பிறகு இருவருக்கும் கசப்பான அனுபவங்களை தந்தது. திருமணம் முடிந்து இன்னும் முதல் வருட திருமண விழா கூட கொண்டாடவில்லை. அதற்குள் டைவர்ஸுக்கு  துணிந்துவிட்டனர். இருவரும் பேசி விவாகரத்து முடிவு எடுத்ததாக சுவேதா பாசு தெரிவித்திருக்கிறார். கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து சட்டப்படி விவாகரத்து பெற்றனர்.   இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விவாகரத்து பற்றி தெரிவித்துள்ள சுவேதா பாசு, 'நானும் ரோஹித் மிட்டலும் ஒருமனதாக பேசி  திருமண வாழ்விலிருந்து பிரிய முடிவு செய்தோம். அவர் என்றும் என்னை கவர்ந்தவர்தான். எதிர்காலம் ரோஹித்துக்கு நன்றாக அமையட்டும்' என வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
More News >>