20 ஓவர் உலகக் கோப்பையே டார்கெட்hellip மித்தாலி ராஜின் புது வியூகம்!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் வழி நடத்துபவர் லேடி டெண்டுல்கர் என்றழைக்கப்படும் மித்தாலி ராஜ். 35 வயதாகும் மித்தாலி இன்னும் சில ஆண்டுகளில் ஓய்வு பெறுவார் எனத் தெரிகிறது.

ஓய்வு பெறுவதற்கு முன்னர் இந்திய அணிக்கு உலகக் கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என்பது அவரது லட்சியமாக இருந்து வருகிறது. கடந்த ஆண்டு நடந்த ஒருநாள் போட்டிகளுக்கான உலகக் கோப்பையில் அணியை இறுதிப் போட்டி வரை வழி நடத்தினார் மித்தாலி.

ஆனால், வெறும் 9 ரன்களில் இங்கிலாந்திடம் கோப்பையைப் கைப்பற்றும் வாய்ப்பைப் பறிகொடுத்தது இந்தியா. இந்நிராசையை இந்த ஆண்டு நவம்பர் மாதம் 20 ஓவர் உலகக் கோப்பை வென்று நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்று எண்ணத்தில் இருக்கிறார் மித்தாலி.

இது குறித்து மித்தாலி, `20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி இன்னும் நன்றாக விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன். ஏனென்றால் இதுவரை எங்கள் அணி விளையாடிய 20 ஓவர் போட்டிகளில் அந்தளவுக்கு திறமையை வெளிப்படுத்தவில்லை. எனவே அதை சீக்கிரமே திருத்திக் கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

More News >>