நடிகை பலாத்கார வீடியோவை  பார்க்க நடிகருக்கு கோர்ட்  அனுமதி.. திலீப் வழக்கில்  உத்தரவு..

கடந்த 2 வருடத்துக்கு முன் தமிழ் மற்றும் மலை யாளம் கன்னட படங்களில் நடித்த பிரபல நடிகை ஒருவர் திருச்சூரில் இருந்து கொச்சிக்கு காரில் சென்றபோது  கும்பல் ஒன்று அவரை வழிமறித்து பலாத்காரம் செய்து வீடியோ எடுத்தது.

இந்த சம்பவம் தொடர்பாக  டிரைவர் பல்சர் சுனில் உட்பட 8 பேரை கேரள போலீஸ் கைது செய்தது. இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக கூறி . பிரபல மலையாள நடிகர் திலீப்பும் கைதாகி பின்னர் ஜாமினில் வெளியில் வந்தார். கொச்சி சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வருகிறது.

போலீசார் கைப்பற்றி நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ள நடிகையின் பலாத்கார வீடியோ மற்றும் அதுதொடர்பான ஆவணங்களை தனது பார்வைக்கு தரவேண்டும் என்று  கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் திலீப் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அவசியமென்றால் சம்பந்தப் பட்ட காட்சிகளை நீதிமன்றத்தில் வைத்து திலீப் பார்த்துக்கொள்ளலாம் என கோர்ட் அனுமதி அளித்தது.

மேலும்  தங்களையும் குறிப்பிட்ட பலாத்கார வீடியோ காட்சிகளை காண அனுமதிக்க வேண்டும் என மேலும் 6 பேர் கொச்சி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து நடிகர் திலீப் உட்பட 7 பேரும் எர்ணாகுளம் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் மேற்பார்வையில் நாளை அந்த வீடியோ காட்சிகளை பார்க்கலாம் என அனுமதி தரப்பட்டுள்ளது.

More News >>