நடிகர் சித்தார்த் திடீர் அழைப்பு..   இந்தியாவை காப்பாற்றுவோம் வாங்க..

நடிகர் சித்தார்த் திரைபடங்களில் நடித்துவரும் அதே வேளையில் சமூக கருத்துக்களையும் டிவிட்டரில் வெளிப்படுத்தி வருகிறார். குடியுரிமை சட்டம் பற்றி தனது கருத்தை அழுத்தமாக வெளியிட்டுள்ளார்.  அவர் கூறியிருப்பதாவது.  

நம் பெயரால்  கொடுங்கோன்மை நடத்துகிறார்கள். இந்துவாக இருக்க பெருமைப்படுங்கள். ஆனால் நம் பெயரில் இதை அவர்கள் செய்ய அனுமதிக்க கூடாது.   நமக்கு நம் வரலாறு தெரியும்.  சிறுபான்மையினரால் நாம் மிரட்டப்படவில்லை. பாசிசம் வேண்டாம் என குரல் கொடுங்கள். முதலில் இஸ்லாமியர்களை வடிகட்டுவார்கள் அடுத்து கிறிஸ்தவர்கள் பிறகு மற்ற  மதத்தினரை வடிகட்டுவார்கள்.

ஒடுக்கப்பட்ட மக்களை அடிமையாக்குவார்கள். அப்பெண்களின் உரிமைகள் பறிபோகும் பிரிவினை செய்யவும் அவர்களுக்கு  வழி தெரியும். அதனால்  பாசிசத்தை வேண்டாம் என்று சொல்லுங்கள். இந்தியாவை காப்பாற்றுங்கள். இவ்வாறு கூறி உள்ளார்.

More News >>