ஆசிட் ஊற்றி எரிக்கப்பட்ட தனியார் ரத்த பரிசோதனை மைய பெண் ஊழியர் மரணம்

சென்னை: மடிப்பாக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆசிட் வீசி எரிக்கப்பட்ட தனியார் ரத்த பரிசோதனை மையத்தில் பணிபுரிந்து வந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னை மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர், அங்கு தனியார் ரத்த பரிசோதனை மையம் நடத்தி வருகிறார். அங்கு, யமுனா என்ற பெண் பணிப்புரிந்து வந்தார்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை யமுனாவை பணிக்கு வரும்படி ராஜா வற்புறுத்தி உள்ளார். இதனால், யமுனா அன்று பணிக்கு வந்துள்ளார்.அப்போது, மையத்திற்கு வந்த ராஜா திடீரென யமுனா மீது ஆசிட் வீசி தீ வைத்து எரித்துள்ளார். இதில், படுகாயமடைந்த யமுனாவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு, யமுனாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதற்கிடையே, யமுனா மீது ஆசிட் ஊற்றி எரித்த ராஜாவை போலீசார கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், யமுனா இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

யமுனாவின் சடலத்தை கண்டு அவரது கணவரும், 4 வயது பெண் குழந்தையும் கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

More News >>