சிவகார்த்திகேயனின் ஹீரோ படம் திருட்டு கதையா? இயக்குனர் - எழுத்தாளர் மோதல்..

மித்ரன் இயக்கிய படம் ஹீரோ. சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். சமீபத்தில் படம் வெளியானது. இப்பட கதை தன்னுடையது என தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் இயக்குநர் போஸ்கோ பிரபு என்பவர் புகார் தெரிவித்தார்.

அவரின்  கதையையும், ஹீரோ பட கதையோடு ஒப்பீடு இரு கதைகளும் ஒன்றுதான் என தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் கூறி உள்ளது.

இதுதொடர்பாக  கோர்ட்டில் சாட்சி சொல்ல தயாராக இருக்கிறோம் என, எழுத்தாளர் சங்கத் தலைவர் இயக்குநர் கே.பாக்யராஜ் எழுத்தாளர் போஸ்கோ பிரபுவுக்கு ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார்.

இதுபற்றி இயக்குனர் மித்ரன் கூறியது:

எங்கள் மீது திருட்டுப் பட்டம் கட்ட வேண்டும் என்ற உள்நோக்கத் தோடு இந்த நடவடிக்கை உள்ளது. எங்கள் படக்குழு வினருக்கு போஸ்கோவிடம்  தொடர்பு  இல்லை.போஸ்கோவிற்கு சங்கத்திலிருந்து கொடுத்த கடிதத்தில் இந்த விவகாரத்தை சட்டப்படி எதிர்கொள்ளும்படி அறிவுறுத்தியிருப்பதால்  சட்டப்படியே எதிர்கொள்ள உறுதியாக இருக்கிறோம்.

இவ்வாறு மித்ரன் கூறி உள்ளார்.

More News >>