என் மாமாதான் எனக்கு உந்து சக்தி.. நடிகை கீர்த்தி மகிழ்ச்சி..
சாவித்ரி வாழ்க்கை கதையாக உருவான மகாநடி படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார். இது குறித்து கீர்த்தி கூறியது:
சாவித்ரியம்மா வாழ்க்கை வரலாறு படமான மகாநடி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது தயக்கத்திலேயே இருந்தேன். நடிக்கலாமா, வேண்டாமா? என்னால் அவ்வளவு கனமான கதாபாத்திரத்தை நடிக்க முடியுமா என்று எண்ணினேன். எனது தயக்கத்தை பார்த்த எனது மாமா, உன்னால் கண்டிப்பாக நடிக்க முடியும்,. கண்டிப்பாக இந்த படத்தில் நடி என்று எனக்கு ஊக்கம் கொடுத்து அப்படத்தில் நடிக்க உந்துசக்தி யாக இருந்தார்.
அந்த படத்தில் நடித்து முடித்த போது சாவித்ரியம்மாவின் ஆசி எனக்கு கிடைத்ததுபோல் உணர்ந்தேன். அவரது ஆசியால்தான் எனக்கு தேசிய விருதும் கிடைத்திருக்கிறது என்று எண்ணுகிறேன். எனக்கு கிடைத்த தேசிய விருதை என் அம்மாவுக்கு நான் சமர்ப்பிக்கிறேன்.
இவ்வாறு கீர்த்தி சுரேஷ் கூறினார்.
நடிகை கீர்த்தி தாயார் மேனகாவும் நடிகைதான். இவர் ரஜினிகாந்த் நடித்த நெற்றிக்கண் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.