ஶ்ரீதேவி மரணம் குறித்து அமிதாப் பச்சனுக்கு உள்ளுணர்வா? விளக்கும் ட்விட்!

நடிகை ஶ்ரீதேவியின் திடீர் மரணத்தால் திரையுலகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவுமே அதிர்ச்சியில் இருக்கும் போது நடிகர் அமிதாப் பச்சனின் ஒரு ட்விட்டர் பதிவு பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

துபாயில் தனது உறவினர் திருமணத்துக்குச் சென்றிருந்த ஶ்ரீதேவி அங்கு திடீர் மாரடைப்பால் காலமானார். இதையடுத்து ஶ்ரீதேவியின் குடும்பத்தினர் உட்பட அனைவரும் அதிர்ச்சியில் இருந்து இதுவரையிலுமே மீளாமல் உள்ளனர்.

இந்நிலையில் ஶ்ரீதேவியின் மரணத் தருவாயின் போது அவர் இறப்புச் செய்தி வெளியாகும் முன்னரே நடிகர் அமிதாப் பச்சன் வெளியிட்ட ஒரு ட்விட் தற்போது வைரலாகி வருகிறது.

கடந்த 24-ம் தேதி நள்ளிரவில் ஒரு ட்விட் வெளியிட்டார். அப்பதிவில், "ஏனென்று தெரியவில்லை. ஏதோவொரு வித்தியாசமான உணர்வு ஏற்படுகிறது" என்று ட்விட்டியுள்ளார். இப்பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

ஶ்ரீதேவி-யுடன் சுமார் 5 படங்களில் இணைந்து நடித்துள்ளார் அமிதாப் பச்சன். மேலும் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த 2012-ம் ஆண்டும் 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' திரைப்ப்டத்தின் மூலம் கம்-பேக் கொடுத்த ஶ்ரீதேவியை உற்சாகப்படுத்தும் விதமாக கவுரவ தோற்றத்தில் தோன்றினார் அமிதாப்.

நெருங்கிய நண்பராக இருந்த அமிதாப்புக்கு ஏற்பட்ட உள்ளுணர்வு ட்விட்டுக்குப் பின்னர் அவர் எந்தவொரு ட்விட்டும் வெளியிடவில்லை. பலரும் ஶ்ரீதேவிக்கு இரங்கல் தெரிவித்து வரும் வேளையில் அமிதாப் அடுத்து எந்தவொரு பதிவையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>