விக்னேஷ்சிவனை பிரிகிறாரா நயன்தாரா? 3 விழாக்களில் ஜோடி மிஸ்ஸிங்கால் பரபரப்பு.

நடிகை நயன்தராவும். இயக்குனர் விக்னேஷ் சிவனும் இணைபிரியா காதல்ஜோடிகளாக கடந்த சில வருடங்களாகவே வலம் வந்துக்கொண்டிருந்தனர். இந்த ஆண்டு இருவரின் நிச்சயதார்தம் நடக்கும் என்று கூறப்பட்டு வந்தது. கடந்து மாதம் இருவரும் பல்வேறு கோவில்களுக்கு ஜோடியாக சென்று வந்தனர்.

இந்த ஆண்டில் விக்னேஷ் உடன் நிச்சயதார்த்தம் நடத்தி அடுத்த ஆண்டில் திருமணம் நடத்தலாம் என்று விக்னேஷ்சிவன் வீட்டில் நயன்தாராவிடம் வற்புறுத்தி வந்தனர், அதற்கு அவர் பிடிகொடுக்காமல் இருந்ததுடன் தொடர்ந்து படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டு வந்தார்.

இந்த புத்தாண்டு தினத்தில் தனிமையாக புத்தாண்டை கொண்டடிய நயன்தார அதற்கு முன்னதாக கிறிஸ்த்மஸ் தினத்தையும் விக்னேஷ் சிவன் இல்லாமல் கொண்டாடினார். இது கோலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தியது. இருவருக்கும் இடையில் பிரிவு ஏற்பட்டிருப்பதாக கூட தகவல் பரவியது.

இந்நிலையில் ஜீ தொலைக்காட்சி நடத்திய விழா ஒன்றில் நயன்தாரா கலந்து கொண்டார், அவருக்கு பிகில், விஸ்வாசம் படங்களில் சிறந்த நடிப்பை வெளியிட்டதற்காக நடிகை ஸ்ரீதேவி பெயரில் 2 விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவிற்கும் நயன்தாரா தனியாகவே வந்திருந்தார். இது இருவருக்குமான பிரிவை வெளிபடுத்துவதாக இருப்பதாக கூறப்படுகிறது.

More News >>