நடிகை ஸ்ரீதேவி மரணத்தில் தொடரும் மர்மம் - என்ன நடக்கிறது?

நடிகை ஸ்ரீதேவி முதலில் மாரடப்பால் இறந்ததாக கூறப்பட்ட நிலையில், பிறகு மதுபோதையில் நீரில் மூழ்கி இறந்ததாக கூறப்பட்டது. தற்போது, தலையின் பின்புறம் காயம் இருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த சனிக்கிழமை இரவு துபாயில் தனது குடும்ப உறவினர் இல்லத் திருமண விழாவுக்கு சென்றிருந்தபோது, நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறப்பட்டது. ஆனால், அவர் குளியல் தொட்டியில் தவறுதலாக மூழ்கி உயிரிழந்துள்ளார் என தடயவியல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இறந்த ஸ்ரீதேவியின் தலையின் பின்புறம் ஆழமான காயங்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தில் உள்ள மர்மம் விலகாமலே உள்ளது.

More News >>