நடனப் பெண் மீது நடிகர் மான நஷ்ட வழக்கு.. ஆபாச வீடியோ பார்க்க சொன்ன விவகாரம்..

பாலிவுட் பிரபல நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா. இவர் தமிழில் ஹீரோ ஜீவா நடித்த ரவுத்திரம் படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.  இந்தியிலும் பல படங்களில் நடித்திருக்கும் கணேஷ், இந்தியில் திரைப்படங்களும் இயக்கி உள்ளார். அவரது நடன குழுவில் இருந்துவிட்டு பின்னர் வெளியேறிய நடன நடிகை ஒருவர் திடீரென்று கணேஷ் ஆசார்யா மீது மும்பை போலீசிலும், பெண்கள் ஆணையத்திலும் புகார் அளித்தார். 'ஆபாச வீடியோ பார்க்குமாறு என்னை கணேஷ் ஆசார்யா கட்டாயப்படுத்தினார்' என புகாரில் கூறி உள்ளார். 

ஆனால் இந்த குற்றச்சாட்டை கணேஷ் ஆசார்யா மறுத்திருக்கிறார். சிலரது தூண்டுதலால் என் மீது நடன கலைஞர் புகார் கூறியிருக்கிறார். அவர் என் குழுவிலிருந்து நீண்ட நாட்களுக்கு முன்பே வெளியேறிவிட்டார். அவரை மீண்டும் நான் சந்திக்கவில்லை. என் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. என்னைபற்றி அவதூறு பரப்பி எனது பெயருக்கு களங்கும் எற்படுத்துபவர்களுக்கு நான் பாடம் புகட்டாமல் விடமாட்டேன்' என்றார். 

கணேஷ் ஆசார்யா மீது பொய் புகார் தரப்பட்டுள்ளது என்று ஏற்கனவே அவரது சார்பில் போலீசில் பதில் புகார் அளிக்கப் பட்டிருக்கிறது. பொய்யான குற்றச்சாட்டு கூறிய நடன கலைஞர் மீது மான நஷ்ட வழக்குத் தொடரப்படும்' என கணேஷ் ஆச்சார்யாவின் வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார்.

More News >>