ராஜமவுலி டபுள் ஹீரோ படம் அடுத்த ஆண்டுக்கு தள்ளிப்போனது.. ஹீரோக்கள் ஹேப்பி..

பிரபாஸ், ராணா, அனுஷ்கா நடித்த பாகுபலி படத்தை இயக்கிய ராஜமவுலி அதன்பிறகு புதிய படம் இயக்குவதற்காக ஒன்றரை வருடத்துக்கும் மேலாக நேரம் எடுத்துக்கொண்டார் அடுத்து ஒரு சரித்திர பின்னணியிலான கதையை உருவாக்குகிறார்.

ஆர்ஆர்ஆர் என்ற பெயரில் உருவாகும் இதில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிக்கின்றனர். இவர்களுடன இந்தி நடிகர் அஜய்தேவ்கன், நடிகை அலியாபட், வெளிநாட்டு நடிகை ஒலிவியா மோரிஸ் நடிக்கிறார்கள். வரும் ஜூலை மாதம் ரிலீஸ் ஆகவிருப்பதாக கூறப்பட்டாலும் அதுபற்றி உறுதியான தகவல் இல்லாமலிருந்தது. இதனால் சிரஞ்சீவி உள்ளிட்ட சில பெரிய ஹீரோக்கள் தங்கள் படங்களை ரிலீஸ் செய்ய தயக்கம் காட்டி வந்தனர். ராஜமவுலி படம் ரிலீஸானால் அது தங்களது படத்தின் வசூலை பாதிக்கும் என்று கருதியாதால் அவர்கள் ஆர்ஆர்ஆர் படத்தின் ரிலீஸ் எப்போது என்று எதிர்பார்த்த வண்ணமிருந்தனர்.  இந்நிலையில் ஆர்ஆர்ஆர் படம் 2021ம்  ஆண்டு  ஜனவரி 8ம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்திருக்கிறது. இதனால் சிரஞ்சீவி உள்ளிட்ட சில ஹீரோக்கள் தங்கள் படங்களை வெளியிடும் பணியை கவனக்க தொடங்கியிருக்கின்றனர்.

More News >>