பாஜக எம்.பி. மீது நடிகர் பிரகாஷ் ராஜ் மானநஷ்ட வழக்கு

நடிகர் பிரகாஷ் ராஜ், பாஜக எம்.பி. பிரதாப் சிம்ஹா மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.

மைசூரு நாடாளுமன்றத் தொகுதி பாஜக எம்.பி-யாக இருப்பவர் பிரதாப் சிம்ஹா. இவர் கடந்த ஆண்டு, நடிகர் பிரகாஷ் ராஜ் குறித்து டுவிட்டரில் ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார். அந்த கருத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பிரகாஷ் ராஜ், அது குறித்து விளக்கம் கேட்டு பிரதாப் சிம்ஹாவுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

அந்த நோட்டீசுக்கு இதுவரை, பிரதாப் சிம்ஹா எந்தவித பதிலும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகின்றது. இந்நிலையில், நேற்று மைசூரு நீதிமன்றத்தில், நடிகர் பிரகாஷ் ராஜ், பிரதாப் சிம்ஹா எம்.பி. மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார்.

‘தன்னைப்பற்றி அவதூறான கருத்தை பதிவிட்ட பிரதாப் சிம்ஹா அதுகுறித்து உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும்‘ என்றும், ‘தனக்கு நஷ்ட ஈடாக ஒரு ரூபாய் மட்டும் வழங்க வேண்டும்’ என்றும் அதில் பிரகாஷ் ராஜ் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>