சன்னி லியோன் இறந்தால் என்ன செய்வீர்கள்? - நடிகை கஸ்தூரி காட்டம்

சன்னி லியோன் இறந்து போனால் என்ன செய்வீர்கள் என்று நடிகை கஸ்தூரி ஸ்ரீதேவி மரணத்தை தொலைக்காட்சி சேனல்கள் தொடர்ந்து ஒளிபரப்புவது குறித்து காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

துபாயில் திருமண நிகழ்ச்சிக்காக சென்ற இடத்தில், தான் தங்கியிருந்த எமிரேட்ஸ் டவர்ஸ் நட்சத்திர ஹோட்டல் அறையில், குளியல் தொட்டி நீரில் மூழ்கி, ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார்.

இந்நிலையில், ஸ்ரீதேவியின் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, நாடு முழுவதிலுமிருந்து, முன்னணி திரைக்கலைஞர்கள், இயக்குநர்கள், சினிமா துறையைச் சேர்ந்த பிரபலங்கள் மும்பைக்கு வந்துள்ளனர். ரசிகர்களும் ஆயிரக்கணக்கில் குவிந்துள்ளனர்.

மேலும், பல தொலைக்காட்சி சேனல்கள் ஸ்ரீதேவியின் மரணம் குறித்தும், பிரபலங்கள் அஞ்சலி செலுத்தியதையும் இறுதிச் சடங்குகள் மற்றும் இறுதி ஊர்வலம் ஆகியவற்றை தொடர்ந்து ஒளிபரப்பிக் கொண்டிருந்தன. இதற்கு நடிகை கஸ்தூரி கண்டனம் தெரிவிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ள கஸ்தூரி, “ஸ்ரீதேவி மறைந்ததை அடுத்து அனைத்து செய்தி ஊடகங்களும் அவரது பாடல்களையும், நடித்த வீடியோ காட்சிகளையும் ஒளிபரப்புகின்றன. சன்னி லியோன் ஒருநாள் இறந்துபோவார். அப்போது என்ன செய்வார்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் ஒரு பதிவில், “என்னை கண்டிக்கும் என் செல்லங்கள் கவனத்திற்கு- இங்கே ஊரே பத்திகிட்டு எரியுது, ஆனா டிவிகாரங்க இன்னும் ஸ்ரீதேவி வீட்டை தான் சுத்தி வாரானுங்க. இன்னிக்கு மட்டும் நாலு டிவில பேச மறுத்துட்டேன். ஒண்ணு மட்டும் தவிர்க்க முடியல. அவங்கவங்க கட்டாயம் அவங்கவங்களுக்கு” என்றும் தெரிவித்துள்ளார்.

More News >>