கமல் மீது மீடூ புகார் கூறுகிறாரா நடிகை ரேகா? 34 ஆண்டுகளுக்குப் பிறகு சர்ச்சையாகும் லிப் டு லிப் காட்சி..

கே.பாலசந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன், ரேவதி, ரேகா நடித்த படம் புன்னகை மன்னன். இப்படத்தில் காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்யும் கமல், ரேகா அருவியிலிருந்து குதிக்க முடிவு செய்வதுபோன்ற காட்சி படமாக்கப்பட்டது.

அப்போது இருவரின் கடைசி நேர் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் காட்சி படமாக்க முடிவு செய்யப்பட்டது. கமல்ஹாசன் திடீரென்று ரேகாவை இழுத்துப்பிடித்து உதட்டில் அழுத்தமாக முத்தம் தருவதுபோன்ற காட்சி படமாக்கப்பட்டது. படம் வெளியானபிறகு இக்காட்சி பரபரப்பாகப் பேசப்பட்டது. தனது சம்மதமே இல்லாமல் இந்த காட்சி படமாக்கப்பட்டதாக அப்போது ரேகா ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.1986ம் ஆண்டு புன்னகை மன்னன் படம் வெளியானது தற்போது 34 ஆண்டுகளுக்குப் பிறகு ரேகாவுக்கு கமல் கொடுத்த முத்தக்காட்சிபற்றி சர்ச்சை எழுப்பப்படுகிறது. நடிகையின் சம்மதம் இல்லாமல் முத்தம் தருவது பாலியல் தொல்லை தருவதுதான் இதுவும் ஒரு வகையில் மீடூ சர்ச்சையைச் சேர்ந்தது என்று சிலர் கமென்ட் பகிர்ந்துவருகின்றனர். திடீரென்று இப்பிரச்சினை எழுப்புவதற்கு என்ன காரணம் என்று விசாரித்தபோது,'சில மாதங்களுக்கு முன் ரேகா அளித்த பேட்டி ஒன்றில் புன்னகை மன்னன் படத்தில் தன்னுடைய சம்மதம் இல்லாமலே முத்தக்காட்சி படமாக்கப்பட்டதாகவும், பிறகுத் தனது அம்மாவிடம் தன்னை ஏமாற்றி முத்தம் கொடுத்துவிட்டதாகவும் ரேகா குறிப்பிட்டிருந்தார். அந்த வீடியோ நெட்டில் வெளியாகி புதிய சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.

More News >>