நாளை நடக்கவிருந்த திமுக எம்.பி.க்கள் கூட்டம் ரத்து..

திமுக எம்.எல்.ஏ. காத்தவராயன் மறைவைத் தொடர்ந்து நாளை நடைபெறவிருந்த திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 31ம் தேதி தொடங்கியது. பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் மார்ச் 2ம் தேதி நாடாளுமன்றம் கூடுகிறது.

இந்த கூட்டத் தொடரில் திமுக உறுப்பினர்கள் எப்படிச் செயல்படுவது என்பது குறித்து விவாதிப்பதற்காக நாளை காலை 10 மணிக்கு அறிவாலயத்தில் திமுக எம்.பி.க்களின் ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாக இருந்தது.

இந்நிலையில், திமுக எம்.எல்.ஏ.க்கள் திருவொற்றியூர் கே.பி.பிசாமி, குடியாத்தம் காத்தவராயன் ஆகியோர் அடுத்தடுத்து மரணம் அடைந்தனர். காத்தவராயன் இறுதி ஊர்வலம் நாளை காலை 10 மணிக்கு பேர்ணாம்பட்டில் நடைபெறுகிறது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொள்ளவிருக்கிறார். இந்த சூழலில், நாளை நடைபெறவிருந்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

More News >>