இதற்கு முன் எங்களைப் போல் எந்த அரசும் செயல்பட்டதில்லை.. உ.பி.யில் மோடி பேச்சு..

எங்களைப் போல் அர்ப்பணிப்புடன், கடுமையாக எந்த அரசும் இதற்கு முன்பு செயல்பட்டதில்லை என்று பிரதமர் மோடி கூறினார்.

உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் நகரில் சமூக நீதி முகாம் நிகழ்ச்சி இன்று(பிப்.29) காலை நடந்தது. இதில், பிரதமர் மோடி கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார். 10,406 மாற்றுத்திறனாளிகள், 16,468 முதியோர்களுக்கு மூன்று சக்கர சைக்கிள் உள்பட பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டன.

விழாவில் மோடி பேசியதாவது:எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் எங்கள் அரசு செயல்பட்டு வருகிறது. 130 கோடி மக்களின் நலனுக்காக நாங்கள் தீவிரமாக பணியாற்றி வருகிறோம்.

முன்பெல்லாம் மாற்றுத்திறனாளிகள் உதவி தேடி அலைந்து திரிந்தார்கள். அவர்களுக்கு யாருமே உதவவில்லை. ஆனால், நாங்கள் அவர்களுக்கும், முதியோருக்கும் அதிகமாக உதவி வருகிறோம். உத்தரப்பிரதேசத்தில் இதற்கு முந்தைய ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.380 கோடி மதிப்பிலான உதவிகளே செய்யப்பட்டன. எங்கள் ஆட்சியில் ரூ.900 கோடி அளவுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு எந்த அரசும் எங்களைப் போல் அர்ப்பணிப்புடன், கடுமையாகச் செயல்பட்டதில்லை.இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

More News >>