இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு! - முதல்தர வீரர்களுக்கு 12 கோடி

வீரர்களின் சம்பள உயர்வுக்கான ஒப்பந்தம் பற்றிய முழு விபரமும் விரைவில் அறிவிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளன.

நடப்பாண்டில் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு ஒப்பந்தம் பற்றி எவ்வித பேச்சுவார்த்தை இல்லாமல் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) காலத்தை நகர்த்திக் கொண்டே சென்றது.

இதனால் விரக்தியடைந்த கேப்டன் விராட் கோலி, தோனி, பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஆகியோர் இணைந்து வீரர்களுக்கான சம்பளத்தை அதிகரித்து தர வேண்டும் என தென் ஆப்பிரிக்கா தொடருக்கு முன்பே வலியுறுத்தினார்கள்.

இந்நிலையில் புதனன்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிர்வாக ஆலோசனைக் கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் உச்சநீதிமன்றத்தால் நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்களுடன் இணைந்து ஆலோசனை நடத்தினர்.

கூட்டத்தின் இறுதி முடிவில் வீரர்களின் சம்பள உயர்வுக்கான ஒப்பந்தம் பற்றிய முழு விபரமும் விரைவில் அறிவிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளன. ‘ஏ’ கிரேடில் உள்ள வீரர்களின் சம்பளம் ரூ.12 கோடிக்கு மேல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News >>