நடிகை பெயரைச் சொல்லி அழைக்கத் தயங்கிய இயக்குநர்.. காரணம் என்ன?

புதுமுக நாயகன் மோனிஷ் குமார், சஞ்சனா சிங், பவர் ஸ்டார், கே.ஆர்.விஜயா, பெரேரா நடிக்கும் படம் டிம் டிப். எல்.சி. நீரஜா ஃபிலிம்ஸ் வழங்க டாக்டர் தணிகாசலம் தயாரிக்கிறார். அருணாச்சலம் ஆனந்த் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கி இருக்கிறார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் இயக்குநர் பாக்யராஜ் பங்கேற்றுப் பேசியதாவது:இங்கே திரையிடப்பட்ட இரண்டு பாடல்களில் ஒரு பாடல் காட்சியில் கதாநாயகனும் நாயகியும் நெருக்கமாக இருக்க வேண்டிய காட்சியில் அவர்களுக்குள் கெமிஸ்ட்ரி குறைவாக இருந்தது அந்த பாடல் காட்சிக்கு முன் அவர்கள் ஏதாவது செய்திருக்க வேண்டும். நான் கூட 'மௌன கீதங்கள்' படத்தில் நடிக்கும் போது சரிதாவை வாங்கப் போங்க என்று தான் அழைப்பேன். அவருக்கு அது ஒரு மாதிரியாக இருந்தது. பெயர் சொல்லி அழையுங்கள் என்பார். அவர் 'தப்புத்தாளங்கள்' போன்ற படங்களில் நடித்து மூத்தவர் என்கிற உணர்வு மனதிலிருந்ததால் கடைசி வரை பெயர் சொல்ல வாய் வார்த்தை வரவே இல்லை. நமக்கு நெருக்கமான நண்பன், வாடா போடா என்று கூப்பிட்ட அந்த நண்பனுக்குத் திருமணம் ஆகி விட்டால் அவனது மனைவியை வாங்கப் போங்க என்றுதான் அழைப்போம்.அப்போது அவன் நீ அவளைப் பெயர் சொல்லிக் கூப்பிடலாம் என்பான். ஆனால் நமக்கு வாய்வராது. அதுதான் நமது பண்பாடு.

நடிகை சஞ்சனாசிங் என்னைப் பற்றிப் பேசும்போது "நிறையச் சொல்லிக் கொடுத்தார்" என்று சொன்னார். பா.விஜய் படத்தில் நடித்தபோது அவரைத் தெரியும். .இந்த படத்தில் பவர்ஸ்டார் ஜோடியாகத்தான் அவர் நடித்திருக்கிறார். பாக்யராஜ் சார் ஜோடியாக என்று என் பெயரைச் சேர்த்து விட்டார். இதையெல்லாம் பார்ப்பவர்களுக்கு அடிக்கடி சந்தித்துக் கொள்வதுபோல் நினைத்துக்கொள்வார்கள். நாங்கள் இருவரும் அடிக்கடி சந்திப்பதில்லை. தீபாவளிக்கு ஒரு முறை சந்திப்பார்களே அப்படித்தான் எப்போதே ஒரு விழாவில் சஞ்சனா சிங்கை சந்திக்கிறேன். ஆனால் அடிக்கடி சந்திப்பதுபோல் அவர் பேசி விட்டார். எனவே தெளிவாகப் பேச வேண்டும்' என்றார்.

More News >>