தாய் மாமன் ஆன தனுஷ்.. திருப்பதியில் உறவுக்குக் கைகொடுத்தார்..

கர்ணன், ஜெகமே தந்திரம் மற்றும் அட்டரங்கி ரே இந்தி படம் என பிசியாக நடித்து வருகிறார் தனுஷ். இந்த பிசியிலும் அவர் தனது குடும்பத்திற்காக நேரம் ஒதுக்கி மகிழ்ந்திருக்கிறார்.

அண்ணன் செல்வராகவன் மற்றும் குடும்பத்தினருடன் சமீபத்தில் திருப்பதி சென்றார் தனுஷ். நேற்று தனது மடியில் ஒரு குழந்தையை அமர்த்தி அதற்கு தலை முடி கத்தரித்து விடுவது போன்ற புகைப்படம் வெளியானது. பின்னர் மொட்டை அடித்திருக்கும் குழந்தையுடன் அமர்ந்திருக்குகிறார். அந்த குழந்தை தனுஷின் அக்கா குழந்தை. தாய் மாமன் என்ற முறையில் தனது மடியில் அமர்த்தி முதல் முடியைக் கத்தரித்து விட்டார். பின்னர் குழந்தைக்கு முறைப்படி திருப்பதி வெங்கடாசலபதிக்கு முடிக் காணிக்கை செலுத்தப் பட்டது.

More News >>