இன்று முதல் தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகாது - தயாரிப்பாளர் சங்கம் அதிரடி அறிவிப்பு

இன்று முதல் தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகாது என தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

டிஜிட்டல் வடிவில் திரைப்பட ஒளிபரப்புக்கான கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தயாரிப்பாளர்கள் சங்கம் வலியுறுத்தி வந்தது. இந்த கோரி நிறைவேற்றப்படாத பட்சத்தில் மார்ச் 1ஆம் தேதி முதல் புதிய படங்களை வெளியிடமாட்டோம் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் அறிவித்தனர்.

இந்த போராட்டத்தை விலக்கிக் கொள்ள பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததை தொடர்ந்து தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்தபடி வியாழனன்று எந்த ஒரு புதுப்படங்களும் வெளியிடப்படவில்லை.

மேலும் மறு அறிவிப்பு வரும் வரை புதிய படங்கள் வெளியாகாது என தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளது. இதேபோல் தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்துள்ள முடிவிற்கு எதிராக செயல்படும் தயாரிப்பாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.

More News >>