ஷூட்டிங் ஸ்பாட்டில் ராஷ்மிகா லூட்டி.. இறுக்கமான ஹீரோக்களும் கலகலக்கின்றனர்..

விஜய் தேவரகொண்டா ஜோடியாக டியர் காம்ரேட் படத்தில் நடித்த ராஷ்மிகா மந்தனா அடுத்து கார்த்தி ஜோடியாகச் சுல்தான் படத்தில் நடிக்கிறார். சுட்டித் தனமான கதாபாத்திரம் அமைந்த படங்களில் நடிக்கும் ராஷ்மிகா படப்பிடிப்பிலும் அதேபாணியைத்தான் கடைப்பிடிக்கிறார்.

இதுபற்றி அவர் கூறும்போது, 'நடிகர், நடிகைகள் எல்லோருமே கதாபாத்திரங்களைப் பொறுத்துப் படப்பிடிப்பு நேரத்தில் அந்தந்த மூடுக்கு மாறிவிடுவோம். இதனால் எப்போதும் ஒரே சூழல் இருக்காது. அந்த உணர்விலிருந்து விடுபடாமல் இருக்கும் நடிகர்கள் உண்டு. என்னைப் பொறுத்தவரைச் சோகமான வேடம், ஜாலியான வேடம் ஏதுவாக இருந்தாலும் நடித்து முடித்த பின் படப்பிடிப்பில் கலாட்டாவாகவும், கலகலப்பாகவும் பேசத் தொடங்கி விடுவேன். படப்பிடிப்பில் அமைதியாகவும்,பொறுமையாகவும் இருக்கும் நடிகர்கள் கூட என்னைப் பார்த்தும் என்னுடன் சேர்ந்து கலகலப்பாகி விடுவார்கள். இந்த மகிழ்ச்சியான சூழல்தான் என்னைப் படப்பிடிப்பில் உற்சாகமாக வேலை செய்ய வைக்கிறது. நான் அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி விட்டேன். கடந்த 6 மாதமாகச் சைவம் சாப்பிடத் தொடங்கி உள்ளேன். இனி வாழ்நாள் முழுவதும் சைவம் மட்டுமே சாப்பிட உள்ளேன்.இவ்வாறு ராஷ்மிகா கூறினார்.

More News >>