முருகதாஸ் படத்தில் நடிக்கப்போவது விஜய்யா, சூர்யாவா? தர்பாருக்குப் பிறகு இயக்கும் புதிய படம்..

ரஜினி நடித்த தர்பார் படத்தையடுத்து புதிய படம் இயக்குவதற்கான ஸ்கிரிப்ட் உருவாக்கு வதில் மும்முரமாக இருக்கிறார் இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ்.

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்திருக்கிறார். இப்படத்தையடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் விஜய் நடிப்பார் என்று பேசப்பட்டு வந்தது ஆனால் கதையைக் கேட்ட விஜய் சில மாற்றங்கள் சொல்ல அதைச் சுதா ஏற்க மறுத்ததாகத் தெரிகிறது. இதையடுத்து வேறு இயக்குநர் படத்தில் விஜய் நடிக்க எண்ணி உள்ளா ராம். தனது அடுத்த படம் இயக்கும் பொறுப்பை ஏ. ஆர். முருகதாஸிடம் தருவதா அல்லது அட்லீயிடம் தருவதா என்ற குழப்பத்தில் விஜய் இருக்கிறாராம். இருவருமே விஜய் மற்றும் அவரது ரசிகர்களின் நாடி துடிப்பை முழுவதுமாக அறிந்து வைத்திருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தகக்கத்து.

இதற்கிடையில் சில வருடங்களுக்கு முன் சூர்யா நடித்து முருகதாஸ் இயக்கத்தில் வெளியான கஜினி படம் வெற்றி அடைந்ததால் அப்படத்தின் 2ம் பாகம் இயக்குவது பற்றியும் முருகதாஸ் திட்டமிட்டுள்ளார். அது குறித்து சூர்யாவிடம் பேசவும் முருகதாஸ் எண்ணி உள்ளாராம்.

மேலும் தர்பார் படத்துக்குப் பிறகு மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றலாம் என்று முருகதாஸிடம் ரஜினி ஏற்கெனவே கூறியிருப்பதாகவும் கோலிவுட்டில் பேச்சு நிலவுகிறது.

More News >>