கொரானாவால் முடங்கும் ரஜினி, விக்ரம் படப்பிடிப்புகள்.. வைரஸ் தாக்குதலுக்குள்ளான கோப்ரா

மனிதர்களை உலகம் முழுவதும் அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது கொரோனோ வைரஸ். சினிமாவுலகையும் ஆட்டிப் படைக்கிறது. கேரளாவில் தியேட்டர்கள் மூடப்பட்டிருக்கின்றன. ஆந்திராவிலும் இதேநிலை. இதற்கிடையில் பல்வேறு படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய் என மல்டி ஸ்டார்கள் பங்கேற்று நடிக்கும் படமாக உருவாகிறது பொன்னியின் செல்வன். இதன் படப்பிடிப்பைக் கடந்த 2 மாதமாக நடத்தி வருகிறார் இயக்குனர் மணிரத்னம். 2ம் கட்டமாகப் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ள நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பை புனேவில் நடத்த எண்ணியிருந்தார். கொனோரா பீதியால் அதன் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

விக்ரம் நடிக்கும் கோப்ரா படப்பிடிப்பு ரஷ்யாவில் நடந்து வந்தது. கொரோனா வைரஸ் காரணமாக தற்போது அங்கு கோப்ரா படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த பட இயக்குநர் அஜய் ஞானமுத்து, 'கோப்ராவை தாக்கிய கொரேனா? இந்தியா அரசின் பயண கட்டுப்பாடு விதிகள் காரணமாக ரஷ்யாவில் பாதியிலேயே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. போங்கய்யா நீங்களும் உங்க கொரோனாவும் என அவர் டிவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.

ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு மும்பை உள்ளிட்ட வட மாநிலங்களில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. அதன் படப்பிடிப்பும் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. கார்த்தி நடிக்கும் சுல்தான், பல்வேறு இந்தி, மலையாள படங்களின் படப்பிடிப்பும் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. மேலும் விஷ்ணு விஷால் நடிக்கும் காடான், படங்களில் ரிலீஸ் கூட கொரோனா பீதியால் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

More News >>