சினிமா படப்பிடிப்புகள் 19ம் தேதி முதல் நிறுத்தம்.. கொரோனா பாதிப்பையடுத்து பெப்சி முடிவு..

தென்னிந்தியத் திரைப்பட சம்மேளன தலைவர் ஆர். கே .செல்வமணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகாரித்துள்ளது. பாதுகாப்பு நிறைந்த நாடுகளிலேயே கொரோனோ வைரஸ் தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றன. இந்தியாவில் கொரோனா தாக்குதல் குறைவாக இருந்தாலும் டெல்லியில் ஒருவர் கொரோனோவுக்கு பலி ஆகியிருக்கிறார்.

இந்நிலையில் இந்த தாக்கு தலை சமாளிக்கத் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டி உள்ளது. சினிமா படப்பிடிப்பின்போது சுகாதார வசதிகள் போதுமான அளவுக்கு இல்லை. எனவே தொழிலாளர்களின் பாதுகாப்பு கருதி வரும் 19ம் தேதி முதல் சினிமா, டிவி, விளம்பர படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறுத்தப்படுகின்றன. இதனால் தயாரிப்பாளர்களுக்கு சிரமம் ஏற்படும் என்றாலும் தொழிலாளர்களின் பாதுகாப்பு என்பது அவசிய மானது. இதற்குத் தயாரிப்பாளர்களும் தொழிலாளர்களும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு ஆர். கே. செல்வ மணிகூறி உள்ளார்.

More News >>