பிரபாஸ்-புஜாவை திருப்பி அனுப்பிய கொரேனோ.. வெளிநாட்டிலிருந்து ஜூட் விட்டனர்..

ராஜமவுலி இயக்கிய பாகுபலி முதல் மற்றும் 2ம் பாகத்தில் நடித்த பிரபாஸ் ஒரே இரவில் உச்சத்துக்குச் சென்றார். உலக அளவில் இப்படங்கள் வசூல் சாதனை படைத்தது. இதனால் பிரபாஸ் படங்களுக்குத் தனி மார்க்கெட் உருவானது. அவர் நடித்த சாஹோ படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இப்படத்தில் பாலிவுட் நடிகை ஷரத்தா கபூர் கதாநாயகியாக நடித்தார். எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. பாகு பலியில் பார்த்த பிரபாஸின் தோற்றத்தும், நடிப்புக்கும் கொஞ்சம் ஒத்துப்போகவில்லை. தவிர கதையும் என்று பெரிய அளவில் கவரவில்லை. இதனால் பிரபாஸே கூட அப்செட் ஆனார். அடுத்து தரும்படம் வெற்றியாக அமைய வேண்டும் என்பதற்காகக் காத்திருந்தார்.

ஏற்கனவே வெற்றிப் படத்தை அளித்த டோலிவுட் இயக்குநர் ராதா கிருஷ்ணா டைரக்‌ஷனில் புதிய படத்தில் நடிக்க பிரபாஸ் ஒப்புக்கொண்டார். ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ரொமான்டிக் கதையாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில்தான் கொரோனோ வைரஸ் பீதி உலகையையே அதிர வைத்திருக்கிறது. வெளிநாடுகளுக்குச் செல்ல பலரும் அஞ்சும் நிலையில் அரசே அவசியம் இல்லாமல் வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. ஆனால் எந்த பீதியையும் பொருட்படுத்தாமல் பிரபாஸ் படக்குழு ஜார்ஜியா புறப்பட்டு சென்றது. பூஜாவும் ஏதோ சாதனை பயணம் செய்யச் செல்வதுபோல் பில்டப் கொடுத்துவிட்டு ஜார்ஜியா சென்றார். ஒரு சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் திடீரென்று வெளிநாட்டு விமானங்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட உள்ளதாக அரசு அறிவித்து.இதையறிந்து அதிர்ச்சி அடைந்த படக்குழு தனி விமானம் பிடித்து அதிகவேமாக இந்தியா திரும்பியது. கொரோ னோ வைரஸ் பாதிப்பு பிரபாஸ் படக் குழுவினரை ஜார்ஜியாவிலி ருந்து ஜூட் விட வைத்துவிட்டது என்று திரையுலகினர் முணுமுணுக்கின்றனர்.

ஜார்ஜியாவிலிருந்து வந்த பூஜா ஹெக்டே, பிரபாஸ் சில நாட்கள் வரை தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.

More News >>