சித்தார்த்துடன் காதலை முறித்தது ஏன்? சமந்தா திடீர் விளக்கம்..

நடிகை சமந்தா பாணா காத்தாடி படத்தில் நடிப்பதற்கு முன் கவுதம் மேனன் இயக்கிய விண்ணைத் தாண்டி வருவாயா மற்றும் யே மாயா சேசாவ் (தெலுங்கு) படங்களில் நடித்திருந்தார். மீண்டும் கவுதம்மேனன் இயக்கத்தில் நீ தானே என்பொன் வசந்தம் படத்தில் நடித்தார். மெல்ல மெல்ல வளர்ந்த சமந்தா தற்போது தனக்கென ஒரு இடத்தை திரையுலகி்ல் பிடித்திருக்கிறார். சித்தார்த்துடன் ஜபர்தஸ்த் என்ற தெலுங்கு படத்தில் ஜோடியாக நடித்தார் சமந்தா. அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று பேசப்பட்டு வந்த நிலையில் திடீரென்று சித்தார்த்துடனான தனது காதலை முறித்தார் சமந்தா. பின்னர் நாக சைதன்யாவை காதலித்து மணந்தார்.

இந்நிலையில் மாஜி காதலர் பற்றி சமந்தா மனம் திறந்தார். சித்தார்த் பெயரைக் குறிப்பிடாமல் தனது பழைய காதல் என்ற அளவில் இந்த தகவலை வெளியிட்டிருக்கிறார்.

தனிப்பட்ட வாழ்க்கையில் சாவித்ரி போல் நானும் பெரிய பிரச்சினையில் சிக்கியிருப்பேன். ஆரம்பத்திலேயே சுதாரித்துக் கொண்டதால் பிரச்சினைகளில் சிக்காமல் மீண்டேன். நல்ல வேலையாக அந்த காதல் உறவிலிருந்து நான் வெளியே வந்து விட்டேன். அக்காதல் நல்லதல்ல என்பதை உணர்ந்துகொண்டு அதன் பின்னர் பிரிந்துவிட்டேன். நாக சைதன்யா என் வாழ்வில் வந்ததற்கு நான் ஆசிர்வதிக்கப் பட்டிருக்கிறேன்' என்றார் சமந்தா.

More News >>