சாபம் விட்ட நடிகை கஸ்தூரி.. உனக்கு கொரோனா வர, நீ பஸ்லதான் அடிபட்டுச் சாவ.

நடிகை கஸ்தூரி தன்னிடம் வம்பிழுப்பவர்களை லைப்ட் ரைட் வாங்கி திட்டி துரத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார். ஆனால் தற்போது ஒருவருக்குச் சாபமிட்டிருக்கிறார்.

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் 4 பேருக்குச் சமீபத்தில் தூக்கு துண்டனை நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்த வழக்கு தொடர்பாகச் சிறுவன் ஒருவன் விடுவிக்கப்பட்டான். அவனுக்குத்தான் கஸ்தூரி சாபமிட்டுள்ளார்.

'கடைசியாக நிர்பயா வழக்கில் 4 விலங்குகள் தூக்கிலிடப்பட்டனர். ஜுவெனில் (சிறுவன்) என்ற சட்டப் பிரிவின் கீழ் உள்ள ஓட்டை வழி யாக ஒருவன் விடுதலையாகி விட்டான். அவனுக்கு கொரோனா வைரஸ் வரட்டும் அல்லது பஸ் அடியில் அடிபட்டு சாவட்டும் எனச் சாபம் விட்டுத் தள்ளியிருக்கிறார்.

More News >>