வீட்டு சிறையில் மணிரத்னம் மகன்.. சுகாசினி வெளியிட்ட வீடியோ..

டைரக்டர் மணிரத்னம், சுகாசினி தம்பதிக்கு நந்தன் என்ற மகன் உள்ளார். கோலிவுட் பக்கம் எங்குமே நந்தன் தலை தென்படுவதில்லை. லண்டனில் படித்து வந்த அவர் சமீபத்தில் சென்னை வந்தார்.

வீட்டுக்குள் நுழைந்ததுமே தனி அறையில் சென்று பூட்டிக்கொண்டார். இது கொரேனாவில் வந்த செயல்பாடுதான்.

வெளிநாடு சென்று வருபவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப் படுவதுடன் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். அந்த விதிமுறைப்படி வீட்டுக்குள்ளேயே தன்னை தனிமைப் படுத்திக் கொண்டிருக்கிறார் நந்தன். அவர் கண்ணாடி ஜன்னல் அருகே அமர்ந்து வெளியில் நடப்பதைக் கவனித்துக்கொண்டிருக்கும் காட்சியை வீடியோவாக எடுத்து வெளியிட்டிருக்கிறார் சுகாசினி.

More News >>