ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடாததற்கு காரணம் என்ன? - விஜயகாந்த் விளக்கம்

தமிழகத்தில் மீண்டும் பொதுத்தேர்தல் வரும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள டெங்கு காய்ச்சலால் பாதிக்கபட்ட நோயாளிகளை தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், ”டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு, வழங்கும் தொகையை அரசு உயர்த்தி வழங்க வேண்டும். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடாது; ஏனெனில் தமிழகத்தில் மீண்டும் பொதுத்தேர்தல் வரும்” என்று தெரிவித்துள்ளார்.

More News >>