ஆர்ட் டைரக்டர் எழுதிய கொரோனா கோபக் கவிதை..

சூர்யா, தனுஷ் படங்களுக்கு செட் போட்டவர்..

சூர்யா நடித்த காப்பான், தனுஷ் நடித்த அனேகன், ஜீவா நடித்த கோ என பல்வேறு படங்களில் கலை இயக்குநராக பணியாற்றியவர் டி.ஆர்.கே.கிரண் ஒரு சில படங்களில் நடித்தும் இருக்கிறார். இவர் கொரோனா பற்றியும், மக்களின் நிலை பற்றியும் கோபமாகக் கவிதை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இதோ அவர் டிவிட்டரில் வெளியிட்ட கவிதை..

கை தட்டுங்கள். நாங்கள் கையாலாகாதவர்கள் என்று கைதட்டுங்கள்.எங்கள் தேசம் மாட்டுக்கும் சாணிக்கும் சிறந்தது என்று கைதட்டுங்கள்!ஒருவேளை சோற்றுக்கு வழி இல்லா தேசம் என்று கைத்தட்டுங்கள்.!வந்த வியாதிக்கு மருந்தில்லா தேசம் இதுவென மனம் குளிர்ந்து கை தட்டுங்கள்.!பொருளாதாரம் அனைத்தும் பூமிக்குள் போனதென்று சந்தோசமாக கை தட்டுங்கள்.!போட்ட பணம் எல்லாம் போன இடம் தெரியலன்னு பொறுமையோடு கை தட்டுங்கள்.!உழைத்து சேர்த்த பணம் வரியாக போகுதுன்னு வரிசையாக கை தட்டுங்கள்.!கேள்வி கேட்பவர் எல்லாம் வேள்வியில் மரித்துப் போக.!நீதிமன்றங்கள் கூட நிதிக்காக அலைகின்றதென அழகாக கை தட்டுங்கள்.!கரவொலியால் கரைபடிந்த உங்கள் கரங்கள் சுத்தமாகட்டும்.!ஓட்டுக்காக காசு வாங்கிய உங்கள் கைகள் பலமாக ஒலி எழுப்பட்டும்.!கேள்வி கேட்க துணிவின்றி உங்கள் இதயத்தின் துடிப்பு, கைத்தட்டலாக எதிர் ஒலிக்கட்டும்.!கிண்டலும் கேலியுமாக நாட்டை துண்டுதுண்டாகக் கொன்றழிக்கும் மதத்திற்கும் சாதிக்கும் கை தட்டுங்கள்.!மனிதன் வாழ வேண்டாம் என்று கை தட்டுங்கள்.!மூளையை விலைக்கு விற்ற முட்டாள்கள் என்று கை தட்டுங்கள்.!உரிமையை பறிகொடுத்த ஊதாரிகள் என்று கை தட்டுங்கள்.சாலையில் நின்று கை தட்டுவதற்கு கூச்சம் என்றால்.!மொட்டை மாடிக்கு சென்று மொத்தமாக கை தட்டுங்கள்.!இந்த நாட்டை காப்பாற்ற இப்படியாக கைத்தட்டி உற்சாகமூட்டுவோம்.!உங்கள் உற்சாகத்தால்,.. ஓடி வந்த பிணி கூட ஒளிந்துகொள்ள இடம் தேடும்!மனிதன் சாகவேண்டும் கை தட்டுங்கள்!கவிதை எழுதியதுபற்றி கிரணிடம் கேட்டபோது நானும் எனது நண்பரும் அமர்ந்து பல்வேறு விஷயங்கள் குறித்து அரை மணி நேரத்துக்கும் மேலாக விவாதித்தோம். அப்போது பல கருத்துக்களை பகிர்ந்துகொண்டோம்.அதில் இடம்பெற்ற கருத்துக்கள் தான் இந்த கவிதை' என்றார்.

More News >>